வியாழன், 11 ஏப்ரல், 2019

"நவீனத்தின் ஓவியம்"

நான்கினமும் சேர்ந்துவாழும்
          நல்லதொரு நிலப்பரப்பு
வான்பரப்பும் பரபரக்க
          வறண்டநிலம் பூமலரும்
தேன்வார்க்கும் பூக்களிலே
          தேனிக்களும் பாட்டிசைக்கும்
காண்போரின் கண்களுக்கு
          கவினுருவாய்க் காட்சிதரும்

நம்நாட்டின் எல்லைகளாய்
         நாற்புறமும் கடலலைகள்
நம்பிக்கை நாணயத்தின்
         நல்லதொரு குடியரசு
நம்மிளையத் தலைமுறைக்கோ
         நவரசத்தின் நாகரீகம்
நம்சிங்கை விளங்கிடுதே
         நவீனத்தின் ஓவியமாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக