வியாழன், 11 ஏப்ரல், 2019


சுற்றுச் சூழல் பாதுகாப்பு

முகிலரும்பு கொட்டுகின்ற முத்தான பூமியிலே
நெகிழிகளும் குப்பைகளும் நிறைந்தே போச்சு
மண்ணோடு மலர்வாசம் மணத்திடும் நிலமெல்லாம்
கண்பார்க்க காட்சியின்றிக் கட்டிடங்கள் ஆச்சு
வாமனனாய் முளைத்திட்ட வானளவு கட்டிடத்தால்
பூமித்தாயின் நெஞ்சமெங்கும் புண்ணாய்ப் போச்சு
சாலையோடும் வாகனங்கள் சத்தமோடு புகையினையும்
ஆலையோடும் இயந்திரங்கள் ஆழாகால விசத்தினையும்
மீண்டும் மீண்டும் சலிப்பின்றிக் கக்கியதால்
வான்வெளியும் மண்வெளியும் பயனற்ற நஞ்சேயாச்சு
நாமின்று செய்கின்ற கேடான செயலாலே
நாளைய தலைமுறையும் நலிவுறும் நிலையேயாச்சு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக