ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

பட்டினத்துக் காற்று

மாமலையாம் பொதிகையிலே
மலர்ந்துவந்த மாதவளாம்
தேமதுரை தெருவெங்கும்
தென்றலாக மணம்பரப்பி
பாமரரும் பரதவரும்
பாடுபடும் பட்டினத்தில்
கோமகளாய்க் கொலுவிருந்து
குளிர்தருவாள்  நற்காற்றாய்

குடநாட்டுக் குன்றோடு கொள்ளிடத்துக் காவிரியில்
தடையின்றித் தவழ்ந்துவரும்
தர்மத்தின் தாயவளாம்
படகோட்டிப் பாடுபடும்
பாட்டாளிக் குடிசையிலும்
படர்கொடியாய்ப் பற்றிடுவாள்
பட்டினத்துப் பனிக்காற்றாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக