ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"பெருங்கடல் பெருங்கடல் உன்னால்..."

விற்பனைப் பொருள்களைப் போலே
வெறுமனே எழுதிடத் துணிந்தே
கற்பனைக் குதிரையில் ஏறி
கவிமணம் பரப்பிட வந்தேன்
கற்றவர் பாடிய கவியின்
கருத்தினைப் படித்திட யெண்ணி
தற்புக ழற்றதால் நானும்
பாவிதழ் தூவிட முனைந்தேன்

பெருவுடல் பெருவுடல் கொண்டு
பிழைத்திடும் பிழைத்திடும் சடமே
கரும்பென கரும்பென இனிப்பின்
கட்டுடல் கட்டுடல் தன்னில்
சிறுமனம் சிறுமனம் பெற்றுச்
சிதைத்திட சிதைத்திட வேண்டேன்
பெருங்கடல் பெருங்கடல் உன்னால்
பிறிதொரு பெருங்கடல் நீந்தேன்

வாழ்ந்திடும் வாழ்கையின் முன்னே
வழிப்பறி கொள்ளையன் போலே
வீழ்த்திடும் யமனையும் கண்டால்
விரும்பிய வாழ்வுதான் எங்கே?
கீழ்த்தரம் உற்றவர் செயலால்
கிடைத்திடும் நிம்மதி யுண்டோ
தாழ்த்திடும் தன்னலம் தவிர்த்துத்
தரணியோர் வாழ்த்திட வாழ்வேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக