ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"கைப்பிடி மண்"

நாடாண்ட மன்னனும் நாளைவரும் சாவினை
நாடாமல் போவதில்லை நம்பியவர் - ஓடி
மறைத்தாலும் காலனும் கைகட்டி நிற்பதில்லை
இறுதியிலோ கைப்பிடி மண்

ஊராரும் உற்றாரும் உன்னுடனே உண்டாலும்
தேர்ப்போகும் வீதிபோல் கூட்டந்தான் - சேர்ந்தாலும்
உடையவர் யாருமின்றிச் சுட்டிடும் காட்டில்
கிடைப்பதோ கைப்பிடி மண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக