வியாழன், 11 ஏப்ரல், 2019

"இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா"

மதுகுடித்த போதையிலே  மயங்கிட்டார்
            முன்சென்று மயக்கத்தின் காரணத்தை
மெதுமெதுவாய் யெடுத்துரைக்க முயன்றாலும்
            மனிதமனம் மயங்கியதா லவர்வாயில்
மதிகெட்ட பேச்சுவரு மேச்சுவரும்
            மேலானோர் சகித்தாலும் வெறுத்தாலும்
மதுசெய்யும் கொடுமைதனை யெடுத்துரைத்து
            மனிதத்தைக் காத்திடுவார். சிலர்மனமோ

மதுவளிக்கும் போதையினை யறிந்தாலும்
             மயக்கத்தின் வேதனையை வுணர்ந்தாலும்
இதுவெல்லா மரசியலில் சகஜமப்பா
             எனச்சொல்லிப் பிழைப்போரு மிங்குண்டு
இதெல்லாமா  சகஜமென்றி கழ்வோரும்
             எகத்தாளம் செய்வோரு மிங்குண்டு 
எதுவெல்லாம் சரியென்றெ டுத்துரைக்க
             ஏற்றதொரு மனிதமன மிங்கில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக