வியாழன், 11 ஏப்ரல், 2019

பத்துச் சொற்களில் பாட்டு

தமிழே மொழியாய் யானதால்
            தரணி யெங்கும் சென்றதே
தமிழே விழியாய் யிருப்பதால்
           தாய்க்கு நிகராய் யானதே
தமிழே அமிழ்தாய் யிருப்பதால்
           தரத்தில் மேன்மை கொண்டதே
அமிழ்தாய் யினிக்கும் தமிழினை
           அள்ளிப் பருக வேண்டியே

முத்து முத்துச் சொல்லை
          மூன்று தமிழாய்க் கூட்டிச்
சத்துக் மிகுந்த  கருத்தால்
          சந்தப் பாட்டு ஒன்றை
வித்தாய்க் கொண்டு நானும்
          விரும்பி யெழுத முயன்று
பத்துப் புதியச் சொல்லால்
          பகுத்தே யெழுதிப் படைத்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக