ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

‘மனமேடை’

நேசமில்லா நெஞ்சினருக்கும்
நன்மையிது வெனக்காட்ட
பாசமென்னும் பரிவோடு
பகிர்ந்தளிக்கும் பண்பினையும்
காசில்லா கருணையோடு
கள்ளமில்லா சிரிப்பினையும்
மாசில்லா எண்ணமோடு
மதிப்பான மாண்பினையும்

குணமென்னும் கோல்கொண்டு
குரங்காட்டம் ஆடுகின்ற
மனமேடைப் பந்தலிலே
மாத்தமிழால் ஏற்றிவைத்து
தினந்தோறும் பாடிவரும்
தெம்பாங்கு பாட்டோடு
மணம்பரப்பும் மலராலே
மரியாதை செய்திடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக