வியாழன், 11 ஏப்ரல், 2019

சிங்கைத் தாயின் புதழ்வன்

சிங்கைத் தாயின் புதழ்வன்
           சீரிய குடும்பத் தலைவன்
இங்கு வந்த போதும்
          ஏற்றம் குன்றா வலியோன்
சங்க கால மரபை
          சமைத்து வாழும் மனிதன்
மங்காப் புகழை யென்றும்
          மதித்து வாழும் தமிழன்

சிங்கை நாட்டை யாளும்
           சிறப்பு வாய்ந்த அரசால்
எங்கள் தமிழைப் போற்ற
           ஏற்றுக் கொண்ட வழியில்
சங்க மொன்றை யமைத்துச்
           சலுகை பலவும் பெற்றுப்
பங்கு கொள்ளும் மாதம்
           பலரும் கூடும் மாதம்

ஏப்ரல் மாதம் முழுதும்
          எங்கள் மொழியைப் போற்றிக்
காப்புக் கவிகள் பாடிக்
          களிப்பு கொள்ளும் புலவன்
மூப்பு கொள்ளாத் தமிழை
         மூன்று தமிழாய்க் கொண்டு
காப்பி யங்கள் படைத்துக்
          காக்கு மெங்கள் மறவன்

மழலை குன்றாக் குழந்தை
          மேடை யேறிப் பேசும்
செழிப்பு மிக்கத் தமிழைச்
         சிந்தை கொள்ளும் மாதம்
உழைக்கும் தமிழ ரெல்லாம்
          ஒன்று கூடும் அரங்கில்
செழுமை நிறைந்த தமிழால்
          சிறப்புச் செய்யும் மாதம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக