வியாழன், 11 ஏப்ரல், 2019

           அன்பே! அன்பே!

கண்ணாய்க் கருத்தாய்க் காத்தாலும்
           கல்லின் குணமாய் இருப்பாயே
என்னில் உன்னைச் சேர்த்தாலும்
           எதிராய் நின்று முறைப்பாயே
அன்பே! அன்பே! என்றுன்னை
           ஆசை யோடு அழைத்தாலும்
என்போல் நெஞ்சால் அன்புருக
            என்றும் உன்னால் இயலாதே

அன்றில் பறவை பார்த்தாயா?
           அவற்றின் கதையைக் கேட்டாயா?
ஒன்றில் லாமல் உயிர்வாழா
            உயர்ந்த நெறியை உணர்ந்தாயா?
என்றும் இதுபோல் நாம்வாழ
            இன்றே நல்ல முடிவோடு
அன்பே! அன்பே! என்றென்னை
           ஆசை தீர அழைப்பாயோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக