ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"காதல் இல்லா உலகில்"

புவியில் தோன்றும் உயிர்கள்
புதிய வாழ்வைத் தொடர
நவிலும் வார்த்தை நயத்தால்
நல்லோர் பலரும் வாழ
கவியின் கருத்துப் புலத்தில்
காட்சி கொண்டு படைக்க
புவியில் உள்ள காதல்
புதுமை யோடு விளங்க

வேதம் நான்கும் சொன்ன
வாழ்வின் உயர்ந்த நிலையும்
நாதம் பாடும் வாயால்
நவிலும் நல்ல சொல்லும்
சோதனை சூழ்ந்த வாழ்வில்
சுகமாய்ப் பெற்ற யாவும்
காதல் இல்லா உலகில்
கலைந்து போகும்  கனவாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக