ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"நிலவும் ஆதவனும்"

காலைத் தோன்றும் ஆதவனும்
கனிவாய் வந்து சூடேற்ற
வேளை யுச்சி வேளையென்று
வெப்பக் கனலு முயர்ந்தேறும்
மாலை நேரம் வந்ததுமே
மதிய சூடும் குறைந்திறங்கும்
காளை வேகம் கொண்டவனும்
களைத்து மேற்கில் உறவாட

இரக்க மற்ற இவ்வுலகில்
இணைந்தோர் பிரிந்தோர் இருவருக்கும்
உறவின் நெருக்க மதிகரிக்க
உண்மை யுள்ளம் மகிழ்ந்திருக்க
இரவில் தோன்றும் ஒளிநிலவும்
இன்பம் நல்கும் பனிநிலவாய்ப்
பரந்து விரிந்த பாரினிலே
பகல்போல் வெளிச்சம் கொட்டிடுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக